×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தந்தையே மகளுக்கு செய்த கொடுமை! இது வேறு எங்கும் இல்ல; நம்ம தூத்துக்குடியில தான்

mom's 2nd husband gave sex torture to 14 year old girl

Advertisement

தூத்துக்குடியில் தாயின் இரண்டாவது கணவர் 14 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தாயும் மகளும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி அய்யர்விளையைச் சேர்ந்த கூலி தொழிலாளி அந்தோணி பாக்கியம். 48 வயதான இவர் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்துள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வந்தார். அந்தோணி பாக்கியம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த விதவை பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது 14 வயது மகளுடன் அந்தோணி பாக்கியத்தின் வீட்டிலேயே வசித்து வந்தார். அதே வீட்டில் தங்கிய அந்த சிறுமி அருகிலிருந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத சமயங்களில் எல்லாம் அந்த இரண்டாவது கணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார்.

நாளுக்கு நாள் அவரின் அத்துமீறல்கள் அதிகமாகவே சிறுமி இது குறித்து தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த தாய் தனது இரண்டாவது கணவர் குறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்தோணி பாக்கியத்தை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sex torture #Thoothukudi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story