இராஜை மக்களுக்கு விடியல்.. 5 மாதத்தில் இரயில்வே மேம்பால பணிகள் முடியும் - எம்.எல்.ஏ உறுதி..!
இராஜை மக்களுக்கு விடியல்.. 5 மாதத்தில் இரயில்வே மேம்பால பணிகள் முடியும் - எம்.எல்.ஏ உறுதி..!
ராஜபாளையத்தில் 5 மாதத்தில் முழுவதுமாக மேம்பால பணியை முடித்து தீபாவளி பரிசாக மக்களுக்கு அளிப்பதாக எம்.எல்.ஏ தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் முன்னிலையில் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் மேம்பால பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர்கள் மின்சார துறை மூலமாக மின்கம்பத்தை அகற்றி தருமாறும், நகராட்சி நிர்வாகத்திடம் கூறி மரங்களை அகற்றி தருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கழகநிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362