முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!! தவறு செய்தால் உடனே பணிநீக்கம்!! அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..
அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர்
அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால் உடனே பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும், தொகுதியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தன்னிடம் தெரிவிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் உதவியாளர்கள் நியமனம், தங்கள் துறையின் நியமனங்கள் மற்றும் பணி மாறுதல்கள் போன்றவை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும், பல்வேறு எம்.எல்.ஏ க்களுக்கு அமைச்சராக வாய்ப்பு கிடைக்காத நிலையில், அந்த வாய்ப்பு கிடைத்தவர்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.
அதேபோல் அமைச்சர்கள் தாங்கள் சார்ந்த துறையின் புள்ளி விவரங்களை சரியாக தெரிந்துவைத்துக்கொள்ளவேண்டும் எனவும், தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362