×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...!!

மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...!!

Advertisement

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டார். 

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த வருடம் செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் முதற் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. 

இதை தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவு வழங்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை நாமக்கல் நகராட்சி, கொண்டிசெட்டிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் அழகு நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்த பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டார். அவருடன் அமைச்சர் மதிவேந்தனும் உணவருந்தினார். அதன் பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #namakkal #Minister Udayanidhi Stalin #Had breakfast with students
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story