×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மஹா புயலால் தமிழகத்திற்கு ஆபத்தா? வானிலை ஆய்வுமையம் தகவல்!

Meteorological Observatory report about maha cyclone

Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளநிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.இந்தநிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவான மஹா புயலால் தமிழகத்தில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்பாக இயக்குநர் புவியரசன் கூறியதாவது, மஹா புயல் தற்போது அரபிக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதால், மஹா புயலால் தமிழகத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லை என தெரிவித்தார். 

அடுத்த 12 மணி நேரத்தில் மஹா புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறும். வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் வரும் 6 ஆம் தேதி குஜராத்தை நோக்கி அடையும். எனவே இந்த புயலால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maha cyclone #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story