×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கம்பால் அடித்து... மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தந்தைக்கு செய்த கொடூரம்.!

கம்பால் அடித்து... மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தந்தைக்கு செய்த கொடூரம்.!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் மனநலம் பாதித்த மகன் தந்தையை சரமாரியாக அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சார்ந்தவர் ராஜ் வயது 65. இவருக்கு திருமணம் ஆகி அசோக் ராஜ் என்ற 23 வயது மகன் இருக்கிறான்.

அசோக் ராஜ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து வந்தனர் அவரது பெற்றோர். இதனால் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு  நலமுடன் இருந்திருக்கிறார் அசோக் ராஜ்.

இந்நிலையில் கடந்த மூன்று மாத காலமாக மருந்து மாத்திரைகளை சாப்பிடாததால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலே இருந்திருக்கிறார் அசோக்ராஜ். இந்த நேரத்தில் வீட்டில் உள்ளவர்களை கண்மூடித்தனமாக  அடித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று  இரவு  தனது தாயை தாக்கியதால்  அவர் பயந்து உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் தனியாக இருந்த தந்தையை கம்பால் சரமாரியாக தாக்கி இருக்கிறார் அசோக் ராஜ். இந்த தாக்குதலில் சம்பவம் நடந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் ராஜ். இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை அவரது தாயார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கணவர் இறந்த நிலையில் கடந்து இருக்கிறார். உடனே குன்னம்  காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே  அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அசோக் ராஜை கைது செய்தனர். மேலும் இறந்த அவரது தந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
##perambalur #Crime #sonmurderfather #tamilnadu #hotnews
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story