×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பூர்வீக சொத்திற்காக அரங்கேறிய படுகொலை.. சரண் அடைந்த கொலையாளிகள்.!

பூர்வீக சொத்திற்காக அரங்கேறிய படுகொலை.. சரண் அடைந்த கொலையாளிகள்.!

Advertisement

பூர்வீக சொத்திற்காக ஒருவரை, பட்டப்பகலில் அவரது உறவினர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையை அடுத்த நடுவக்குறிச்சி, முத்துராமலிங்க தெருவில் வசித்து வருபவர் முத்துமாலை (வயது 39). இவர் வக்கீல் ஒருவரிடம் சில வருடங்களுக்கு முன்னதாக குமாஸ்தாவாக பணிபுரிந்துள்ளார்.

தற்போது, தனது ஊரில் நடைபெற்று வரும் போது பிரச்சனைகளை சரி செய்வதற்காக அதிகாரிகளுக்கு மனு அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் முத்து மாலையின் தாத்தாவின் பெயரில் உள்ள பூர்வீக சொத்தைப் பிரிப்பது தொடர்பாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே நீண்ட நாட்களாக பெரும் தகராறு இருந்து வந்துள்ளது.

இதனை தொடர்ந்து நடுவக்குறிச்சி ரேஷன் கடை அருகாமையில் முத்துமாலையின் அத்தை மகனான நெல்லை மாவட்டத்தில் உள்ள திருத்து பகுதியினைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அவரின் சித்தப்பா மகனான நடுவக்குறிச்சியை சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் முத்துமாலையை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தாலுகாவிற்கு வந்த காவல்துறையினர் முத்துமாலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன் முத்துமாலையை கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் சுப்பிரமணியன் மற்றும் முருகன் ஆகிய இருவரும் நெல்லை காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.  பூர்வீக சொத்திற்காக  ஒருவரை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thirunelveli #Murder #reatives
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story