×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காமப்பசியில் கள்ளக்காதலியின் மகள் மீது மோகம்.."அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" தாய் பகீர் செயல்.!

காமப்பசியில் கள்ளக்காதலியின் மகள் மீது மோகம்..அட்ஜஸ்ட் பண்ணிக்கோ தாய் பகீர் செயல்.!

Advertisement

சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த தாயின் கள்ளக்காதலன் மற்றும் உடந்தையாய் இருந்த தாய் இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை, அள்ளம் சேனவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜய்யன். இவர் அதே பகுதியில் சொந்தமாக பர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடையில் சுனிதா என்ற 37 வயது பெண் வேலை பார்த்து வந்துள்ளார்.

சுனிதாவிற்கு 11 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். சுனிதாவின் கணவர் முதுகு தண்டுவடம் பாதித்து படுத்த படுக்கையாக இருந்த நிலையில், ராஜய்யனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ராஜய்யன் கடை விடுமுறை நாட்களில் சுனிதாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில், ஒரு நாள் திட்டமிட்டபடி சுனிதா இல்லாததால், அந்த கொடூரன் தனது காமப்பசியினை அடக்க முடியாமல் அங்கிருந்த சுனிதாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

இதுகுறித்து தனது தாயிடம் சிறுமி கூறி அழுதுள்ளார். ஆனால், கள்ளக்காதலால் மதிமயங்கி போன தாயும், 'உன் மேல அங்கிளுக்கு ரொம்ப ஆசை', "அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என கூறியுள்ளார். மேலும், இதனை வெளியில் சொல்லாதே என சிறுமியை எச்சரித்துள்ளார். 

இதனையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக ஞாயிறுதோறும் வீட்டிற்கு வரும் ராஜய்யன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான். இதனால் பயந்து போன சிறுமி வெளியிலும் சொல்ல முடியாமல், வீட்டிலும் சொல்ல முடியாமல் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளார்.

அத்துடன் சிறுமி யாரிடம் சொல்வது என தெரியாமல் தனது தோழியிடம் இது குறித்து கூறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்டு பேரதிர்ச்சியடைந்த தோழி, குழந்தைகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு ஆலோசனை கூறினார். தோழியின் ஆலோசனைப்படி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொடர்பு கொண்ட மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார். 

விசாரணைக்கு வந்த குழந்தைகள் நல அலுவலர்கள் சிறுமியை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்  மேலும், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ராஜய்யன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததற்காக சிறுமியின் தாயார் ஆகிய இருவரையும் போக்சோ கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kanyakumari #girl harassment #student
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story