×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்கையில் உஷார்.. விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு.!

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்கையில் உஷார்.. விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு.!

Advertisement

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில், இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னையில் உள்ள ஆவடி அருகாமையில் பருத்திப்பட்டு நிரஞ்சன் நகரில் உள்ள ஆப்டிமா என்ற அடுக்குமாடி குடியிருப்பில் கழிவு நீர் சுத்தம் செய்வதற்காக முத்து என்பவர் சென்றுள்ளார். அப்போது அவர் கழிவுநீர் தொட்டியில், இறங்கிதில் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.

இதனை கண்ட அருகிலிருந்த குணசேகரன் என்பவர் அவரை காப்பாற்ற முயன்ற போது, அவரும் மயங்கி விழுந்துள்ளார். இதனால் பயந்து போன குடியிருப்புவாசிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இருவரின் உடலையும் மீட்டுள்ளனர். மேலும், மயங்கி விழுந்த முத்து என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் குணசேகரன் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #aavadi #dead #Drainage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story