×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பேஸ்புக் காதலனை நம்பி அவனுடன் தனி வீட்டில் தங்கிய மாணவி! இறுதியில் நடந்த சோகம்!

Medical student died in orathanadu for love problem

Advertisement

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, இவரது மகள் இந்துமதி. இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்துள்ளார். இந்நிலையில் இந்துமதிக்கு, சிவகங்கையை சேர்ந்த சதிஷ் குமார் என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து வந்துள்ளனர். தன்னை ஒரு பொறியாளர் என அறிமுகம் செய்துகொண்ட சதிஷ் இருவரின் வீட்டுக்கும் தெரியாமல் இந்திமதியினை ஏமாற்றி பதிவு திருமணம் செய்து ஒரத்தநாட்டில் வீடு எடுத்து தங்கியுள்ளார்.

தனக்கு பதிவு திருணம் முடிந்ததை இந்துமதி வீட்டிற்கு சொல்லாமல், தான் கல்லூரி விடுதியில்தான் தங்கியிருப்பதாகவும், கல்லூரி விடுமுறை விட்டு வீட்டிற்கு செல்வதுபோல் அவ்வப்போது சென்றுவந்துள்ளார். மேலும், தனது கணவருடன் வீட்டில் தங்கியிருந்து கல்லூரி சென்றுவந்துள்ளார் இந்துமதி.

இந்நிலையில் சதிஷ் பொறியாளர் இல்லை என்றும் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும் இந்துமதிக்கு தெரியவர கணவன் மனைவி இடையே சண்டை வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இந்துமதி வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார். அவரது கணவர் சதிஷ் குடிபோதையில் மயக்க நிலையில் அருகில் கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் இந்துமதி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது சதிஷ் அவரை கொலை செய்தாரா என விசாரித்து வருகின்றனர். தங்கள் மகள் தங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டு இப்படி பலியானதை பார்த்த அவரது பெற்றோர் துடி துடித்த காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Facebook crime #marriage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story