×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை! குடும்ப தகராறு தான் காரணமா? காவல்துறையினர் தீவிர விசாரணை!!

மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை! குடும்ப தகராறு தான் காரணமா? காவல்துறையினர் தீவிர விசாரணை!!

Advertisement

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊத்துமலை அருகே உள்ள வேலாயுதபுரம் என்னும் தெற்கு  தெருவில் வசித்து வருபவர் வேலுச்சாமி. இவரது மகன் 36 வயதுடைய செந்தில்குமார்.

இவர் அதே பகுதியில் மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் திடீரென்று செந்தில்குமார் தற்கொலை செய்து கொள்ள நினைத்து விஷம் குடித்துள்ளார்.

இதனால் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செந்தில்குமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். உறவினர்கள் மற்றும் மக்கள் இருப்பவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குடும்ப தகராறு காரணத்தில் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thenkasi #suicide #Tamil Spark
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story