×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigNews: முன்னாள் வன்னியர்சங்க நிர்வாகி 12 பேர் கும்பலால் துள்ளத்துடிக்க படுகொலை.. பரபரப்பு சம்பவம்.! 

#BigNews: முன்னாள் வன்னியர்சங்க நிர்வாகி 12 பேர் கும்பலால் துள்ளத்துடிக்க படுகொலை.. பரபரப்பு சம்பவம்.! 

Advertisement

முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மயிலாடுதுறையில் உள்ள கொத்ததெருவில் வசித்து வருபவர் கண்ணன். இதே பகுதியில் வசித்து வந்தவர் கதிரவன். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டில் உணவகத்தில் சாப்பிடும்போது சண்டையிட்டுள்ளனர். அப்போது கதிரவனை கண்ணன் தாக்கவே, இது தொடர்பான புகாரில் கண்ணன் கைதாகியுள்ளார். 

மேலும், அவரின் மீது குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்ட காரணத்தால், தற்போதுவரை சிறையில் இருந்தவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக வெளியே வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவில் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது, அவரை இடைமறித்த 12 பேர் கும்பல், கண்ணனை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கண்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 12 பேர் கும்பலுக்கு வலைவீசியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mayiladuthurai #Vanniyar Sangam #tamilnadu #Murder #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story