×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விமானத்தில் பறந்தபடியே திருமணம் செய்த ஜோடி.! வேற லெவல் மதுரை தம்பதி.!

ஊரடங்கு காரணமாக பறக்கும் விமானத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஊரடங்கு காரணமாக பறக்கும் விமானத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ராகேஷ் மற்றும் தீக்க்ஷு. இவர்கள் இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். ஊரடங்கு காரணமாக மதுரை மாவட்டத்தில் அவர்களது திருமணம் எளிய முறையில் நடத்தப்பட்டது. 

இந்தநிலையில் இன்று ஊரடங்கில் சில தளர்வுகள் அரசு அறிவித்திருந்த நிலையில் மீண்டும் புதுமையாகத் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய அவர்களது குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதனையடுத்து, சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து பறக்கும் விமானத்தில் அவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதனையடுத்து இந்த தம்பதியின் குடும்பத்தைச் சேர்ந்த 130 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற்று, விமானத்தில் பறந்தபடியே உறவினர்கள் முன்னிலையில் அந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#marriage #flight #madurai
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story