×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யானைகளின் பெயரில் தனது கோடிக்கணக்கான சொத்துக்களை எழுதிவைத்த நபர்! வெளியான நெகிழ்ச்சி காரணம்!

Man wrote crore value property on his two elephants names

Advertisement

பீகாரின் தலைநகர் பாட்னாவில் வசித்து வருபவர் அக்தர் இமாம். 50 வயது நிறைந்த இவருக்கு யானைகள் என்றால் கொள்ளை பிரியம். மேலும் இவர் 15 வயதில் மோதி என்ற யானையையும், 20 வயதுமிக்க ராணி என்ற யானையையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் தான் இறந்தபிறகு, தனது பிள்ளைகளைப் போல வளர்த்துவரும் இந்த யானைகள் அனாதையாகி விடக் கூடாது, உணவிற்காக எங்கும்  அலையக்கூடாது என எண்ணிய அவர் தனது சொத்துக்களை யானைமீது எழுதி வைத்துள்ளார்.

இதுகுறித்து அக்தர் இமாம் கூறுகையில், மிருகங்கள் மனிதர்களைப்போல கிடையாது. அவை எப்பொழுதும்  உண்மையான அன்பையே  காட்டுகின்றன. நான் பல ஆண்டுகளாக யானையின் பாதுகாப்பிற்காக தீவிரமாக போராடி வருகிறேன். மேலும் நான் வளர்க்கும் எனது இருயானைகளும் எனக்கு குழந்தைகள் போல. அந்த இரு யானைகளும் நான் இறந்த பிறகு ஆதரவில்லாமல் இருப்பதை நான் விரும்பவில்லை. அதனால்தான் கோடிக்கணக்கில் உள்ள எனது சொத்துக்களை அதன் பெயரில் எழுதி வைத்துள்ளேன். 

அந்த யானைகள் பல முறை என்னை ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது.மேலும் யானைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அதனை புத்தகங்களில் மட்டும் பார்க்கும் நிலைதான் வருங்காலத்தில் ஏற்பட்டுவிடும் என கவலையுடன் கூறியுள்ளார். இந்நிலையில் தான் வளர்த்த யானைகளுக்காக  சொத்தை எழுதி வைத்த அக்தர் இமாம்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#elephant #property #Bihar
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story