என்னை கத்தியால் குத்துனாங்க..! இளைஞர் சொன்னதை நம்பி சிசிடிவியை பார்த்த போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
Man stabbed him self and complaint to police
வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை யாரோ கத்தியால் குத்திவிட்டதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுக்க, அதை நம்பி சோதனை செய்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் நடந்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே சந்தைக்கு சென்ற வடமாநில இளைஞர் ஒருவருக்கு வயிற்றில் கத்திக்குத்து பட்டதாகவும், அந்த காயத்துடன் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முகம் தெரியாத நபர் ஒருவர் தன்னை கத்தியால் குத்திவிட்டு தப்பித்து ஓடிவிட்டதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். இதனை அடுத்து, பதிக்கப்பட்ட நபர் கூறிய இடத்தில் இருந்த CCTV காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது, சாலையோர கடை ஒன்றில் கத்தியை வாங்கி, தன்னை தானே அந்த இளைஞர் குத்திக்கொண்டது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. குடிபோதையில் இருந்த அந்த இளைஞர் தன்னை தானே கத்தியால் குத்தி கொண்டதும், ஆனால், வேறு யாரோ ஒருவர் கத்தியால் குத்தி விட்டதாக போலீஸாரிடம் கூறி வந்ததும் அப்போதுதான் போலீசாருக்கு தெரியவந்தது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362