×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

5 மனைவிகள் கட்டியும், அடங்காத ஆசை.! கதறக்கதற 50 வயது காமகொடூரன் செய்த கேவலமான காரியத்தை பார்த்தீர்களா!!

man sexually abused her daughter

Advertisement

வேலூர் மாவட்டம் பகுதியில் உள்ள காயிதேமில்லத் நகரில் வசித்து வருபவர் ஷான்பாஷா. 50 வயது நிறைந்த இவர் பல பெண்களிடம் காதல் வசனம் பேசி அவர்களை தனது காதல் வலையில் சிக்கவைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில்அவர் வாழ்க்கை கொடுப்பதாக ஆசை வார்த்தைகூறி இதுவரை 5 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறபடுகிறது.

இந்நிலையில் ஷான்பாஷாவின் 3வது மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரது 5 வயது பெண் குழந்தை ஒன்று ஷான்பாஷாவின் தங்கை வீட்டில் வளர்ந்து வந்தாள். இந்நிலையில் அவளை தூங்க வைப்பதற்காக இரவு நேரத்தில் மட்டும் குழந்தையை தனது வீட்டுக்கு அழைத்து வருவதை ஷான்பாஷா வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இரவு நேரத்தில் குடிபோதையில் இருந்த ஷான்பாஷா, குழந்தையை தனது வீட்டிற்கு அழைத்து சென்று, தான் பெற்ற பிள்ளை என்றுகூட பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மறுநாள் தனது அத்தை வீட்டிற்கு சென்றபோது வலியால் கதறிஅழுதுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் அத்தை உடனே சிறுமியை மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு நடந்த கொடூரம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இதுகுறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஷான்பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sexual abuse #daughter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story