×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படுக்கைக்கு வர மறுத்த இளம் பெண்! இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Man killed friend wife and arrested

Advertisement

விழுப்புரம் மாவட்டம் பாக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சகுந்தலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் நிலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் தனது மாமனார், மாமியாருடன் வீட்டில் வசித்துவந்துள்ளார். இதில் சகுந்தலாவின் உறவுக்கார நபர் ஒருவர் அடிக்கடி சகுந்தலாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

ஒருநாள் அவர் வீட்டிற்கு வரும்போது தன்னுடன் ஏழுமலை என்ற நபரையும் உடன் அழைத்துவந்துள்ளார். சங்குந்தளவின் கணவர் வெளிநாட்டில் இருப்பதை அறிந்த ஏழுமலை சந்தகுந்தலாவை எப்படியாவது அடையவேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சந்தகுந்தலாவின் வீட்டிற்க்கு வந்த ஏழுமலை அவரிடம் பேசி தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு சகுந்தலா மறுப்பு தெரிவிக்க அங்கிருந்த மண்ணெண்ணையை சந்தகுந்தளவின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

உடலில் தீ பற்றியதும் சந்தகுந்தலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். உறவினர்கள் வருவதை பார்த்த ஏழுமலை சகுந்தலா தற்கொலை செய்துகொள்ள தீ வைத்துக்கொண்டதாகவும், தான் அவரை காப்பாற்றத்தான் வந்ததாகவும் கூறியுள்ளார். இதில் சந்தகுந்தலாவின் உடலில் 90% தீ காயம் ஏற்பட்டது.

ஏழுமலைக்கும் தீ காயம் ஏற்பட்டதை அடுத்து இருவரையும் உறவினர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்க, அங்கு வந்த போலீசார் சங்குதலாவிடம் வாக்குமூலம் பெற்றனர். இத்தனைக்கும் ஏழுமலைதான் காரணம் என அறிந்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Crime news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story