×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சோளக்காட்டுக்குள் நாள் முழுக்க உல்லாசம்! கடைசியில் காத்திருந்த பெரும் அதிர்ச்சி! வெளியான திடுக்கிடும் உண்மை.

Man died in dharmapuri at gun shot

Advertisement

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான ராதா என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆறுமுகம் மற்றும் ராதா இருவரும் அங்கிருக்கும் சோள காட்டிற்குள் உல்லாசம் அனுபவிப்பதற்காக ஒதுங்கியுள்னனர். இந்நிலையில் தங்கள் சோளக்காட்டிற்குள் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்வதால் அவற்றை சுடுவதற்காக வேட்டை துப்பாக்கியுடன் சின்னசாமி மற்றும் ஆறுமுகம் இருவரும் அங்கு வந்துள்னனர்.

அவர்கள் அங்கு வந்த நேரம் பார்த்து ஆறுமுகம் மற்றும் ராதா இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் சோளகதிர்கள் அசைந்துள்ளது. இதனால் பன்றிகள்தான் உள்ளே புகுத்துவிட்டதாக நினைத்த சின்னசாமி மற்றும் ஆறுமுகம் துப்பாக்கியை எடுத்து சுட்டுள்னனர்.

இதில் குண்டு ஆறுமுகம் உடலில் பாய்ந்ததை அடுத்து அவர் சம்பவ இடத்திலையே உயிர்  இழந்தார். மேலும், இந்த சம்பவத்தில் ராதாவும் காயமடைந்துள்ளார். இவர்கள் இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சின்னசாமியும், ஆறுமுகமும் ராதாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அதன்பின்னர் ஆறுமுகம் தற்கொலை செய்துகொண்டதுபோல் காட்ட அவரது உடல் மற்றும் மோட்டார் சைக்கிளை ரயில் தண்டவாளத்தில் போட்டுள்னனர். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் இந்த தகவல்களை கண்டுபிடித்துள்னனர்.

ஆறுமுகம் மற்றும் சின்னசாமி இருவருக்கும் ஏற்கனவே நில தகராறு இருந்ததாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில்தான் அவர்கள் இப்படி வேண்டுமென்றே செய்துள்ளதாக ஆறுமுகத்தின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Crime news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story