12 ஆம் வகுப்பு மாணவியுடன் உல்லாசம்! பெற்றோருக்கு தெரியாமல் 7 மாதம் கர்ப்பம்!! விஷயம் தெரிந்து பதறிப்போன பெற்றோர்..
12 ஆம் வகுப்பு படித்துவரும் பள்ளி மாணவியை காதலித்து கற்பமாகிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீ
12 ஆம் வகுப்பு படித்துவரும் பள்ளி மாணவியை காதலித்து கற்பமாகிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை (25). இவர் அந்த பகுதியில் உள்ள 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் நெருங்கி பழகிவந்தநிலையில், இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் காதல் என்ற பெயரில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.
இதில் பள்ளி மாணவி கர்ப்பம்தரித்துள்ளார். இந்த தகவல் மாணவியின் வீட்டிற்கு தெரியாதநிலையில், கடந்த சில நாட்களாக மகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட பெற்றோர், அவரை அழைத்து விசாரித்ததில் செல்லத்துரையுடனான உறவு குறித்து மாணவி கூறியதோடு, தான் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362