×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலியின் தோழிக்கு செய்யும் காரியமா இது?.. இளைஞனின் பதறவைக்கும் செயல்.. அதிர்ச்சி உண்மை.. உஷார்..!!

காதலியின் தோழிக்கு செய்யும் காரியமா இது?.. இளைஞனின் பதறவைக்கும் செயல்.. அதிர்ச்சி உண்மை.. உஷார்..!!

Advertisement

காதலி தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால், காதலியின் தோழியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாலிபர் இணையத்தில் பதிவிட்ட பதறவைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் 27 வயது பெண் வசித்து வருகிறார். இவர் தனது மொபைலில் உள்ள இன்ஸ்டாகிராம் இணையத்தள பக்கத்தை பயன்படுத்தி வந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டதாக தெரியவருகிறது. 

இதனால் மனவருத்தத்தில் இருந்த பெண்மணி சம்பவத்தன்று திருப்பூர் மாவட்ட சைபர்கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கருங்குமாறன்பாளையம் பகுதியைச் சார்ந்த நடேசன் என்பவனின் மகன் சக்திவேல் (வயது 27) என்பவனை கைது செய்தனர். 

விசாரணையில் சக்திவேல் பெண்ணொருவரை காதலித்து வந்ததாகவும், அந்தப் பெண்மணி தன்னுடன் பேசுவதை நிறுத்திவிட்ட நிலையில், அந்தப் பெண்ணின் தோழியிடம் அவன் பேசி வந்துள்ளான். இந்த விஷயம் தொடர்பாக காதலி கேட்ட சமயத்தில் "எனக்கு உன்னை விட உன் தோழியை முக்கியம்" என்று கூறியதாக தெரியவருகிறது. 

இதனால் தோழி மீதுள்ள ஆத்திரத்தில் இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் சக்திவேலை கைது செய்த காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tripur #girl #photo #Instagram
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story