×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காட்டு யானை முன் சேட்டை செய்த நபர்.! வைரலான வீடியோ.! அலேக்காக தட்டி தூக்கிய போலீசார்.!

காட்டு யானை முன் சேட்டை செய்த நபர்.! வைரலான வீடியோவால் தட்டிதூக்கிய போலீஸ்!!

Advertisement

ஒகேனக்கல் சாலையோரத்தில் நின்ற ஒற்றை யானையை தொந்தரவு செய்து சேட்டை செய்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கோடைக்காலங்களில் ஒகேனக்கல் வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது காட்டு யானைகள் சாலையோரங்களில் வருவது வழக்கம். அவ்வாறு அண்மையில் ஒகேனக்கல் காட்டுப்பகுதியில் சாலையோரத்தில் ஒற்றை யானை ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதி வழியே சென்ற நபர் ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி சென்று யானைக்கு முன் நின்று சீண்டியுள்ளார். அமைதியாக நின்று கொண்டிருந்த யானையை கோபப்படுத்தியுள்ளார். அதன் முன்பு நின்று போஸ் கொடுத்துள்ளார். ஆனால் யானை நல்ல மனநிலையில் இருந்ததால் அவரை தாக்கவில்லை.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பலரும் அவரை விமர்சித்து கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் யானையை தொந்தரவு செய்த அந்த நபர் தர்மபுரி மாவட்டம் எட்டிக்குட்டையை சேர்ந்த மீசை முருகேசன் என தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#arrest #elephant #Okenakkal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story