இவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 கண்டிப்பாக கிடையாது...! விதிகளை வெளிப்படையாக அறிவித்த தமிழக அரசு!!!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் பயனாளிகளாக சேர முடியாது என நடைமுறையில் உள்ள தகுதி விதிகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்பார்த்திருந்த பலருக்கு தகுதி விதிகள் குறித்து புதிய விளக்கம் வெளியாகியுள்ளது. ரூ.1,000 அல்லது உயர்த்தப்படும் என கூறப்படும் தொகையை பெற அனைவருக்கும் வாய்ப்பு இல்லை என்பதால், புதிய விண்ணப்பதாரர்கள் தகுதி நிபந்தனைகளை கவனமாக அறிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
யாருக்கு தகுதி இல்லை?
அரசின் நடைமுறையில் உள்ள விதிகளின்படி, மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர முடியாது. இதேபோல், ஓய்வூதியம் பெறும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் இந்தத் திட்டத்தின் பலன் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!
குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும் விதி
இந்தத் தகுதி நீக்க விதி பெண் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்ல. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மனைவிகளுக்கும் இதே நிபந்தனை பொருந்தும். எனவே, அவர்கள் அரசு ஊழியர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியாது.
புதிய விண்ணப்பங்கள் பரிசீலனை
தற்போது புதிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், தகுதி விதிகளில் எந்தவித தளர்வும் வழங்கப்படும் என்ற தகவல் இல்லை என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விண்ணப்பதாரர்கள் அரசின் அதிகாரப்பூர்வ தகுதி நிபந்தனைகளை சரிபார்த்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: ஷாக் நியூஸ். மகளிருக்கு ரூ.2,500.. இவர்களுக்கு நிச்சயம் கிடையாது.. புதிய விண்ணப்பங்களில் அரசு காட்டிய கறார் முகம்..!