×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமாகியும் காதலனுடன் நெருக்கம் காண்பித்த அக்கா வெட்டிக்கொலை; முன்னாள் காதலரும் தலைதுண்டித்து படுகொலை.! 

திருமணமாகியும் காதலனுடன் நெருக்கம் காண்பித்த அக்கா வெட்டிக்கொலை; முன்னாள் காதலரும் தலைதுண்டித்து படுகொலை.! 

Advertisement

 

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், கூடக்கோவில் காவல் எல்லைக்குட்பட்ட கொம்பாடி கிராமத்தில் வசித்து வருபவர் நந்தி பெருமாள். இவரின் மகன் சதீஷ் குமார் (வயது 28). கம்பி கட்டும் வேலை செய்து வந்துள்ளார். 

இப்பகுதியை சேர்ந்த நபர் அழகுமலை. இவரின் மனைவி சின்னபிடாரி. தம்பதிகளின் மகள் மகாலட்சுமி (வயது 24). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், காதல் விவகாரம் மகாலட்சுமி பெற்றோருக்கு தெரியவந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு உறவினர் இளைஞருக்கு மகளை திருமணம் செய்து வைத்துள்ளனர். அவருடன் குடித்தனம் நடத்த பிடிக்காத மகாலட்சுமி, திருமணமான ஒரே வாரத்தில் வீட்டிற்கு வந்துவிட்டார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் அறிவுரை கூறியும் பலன் இல்லை. 

வீட்டிலேயே முடங்கிக்கிடந்த மகாலட்சுமியை கண்டறிந்த சதீஷ் குமார், அவரை தேடிக்கண்டுபிடித்து மீண்டும் காதலை வளர்த்து இருக்கிறார். இந்த விவரம் மகாலட்சுமியின் தம்பியான ப்ரவீனுக்கு தெரியவரவே, அவர் இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால், எந்த பலனும் இல்லை. 

இதனால் பிரச்சனையை தீர்க்க சதீஷை தீர்த்துக்காட்டுவதே சரியான முடிவு என திட்டமிட்ட பிரவீன், சம்பவத்தன்று வேலையை முடித்து வீட்டிற்கு வந்துகொண்டு இருந்த சதீஷின் கண்களில் மிளகாய்பொடி தூவி கொலை செய்து தப்பி சென்றார். 

கொலை வெறியோடு வீட்டிற்கு சென்ற பிரவீன், வீட்டில் இருந்த அக்கா மகாலட்சுமியை சரமாரியாக வெட்டிச்சாய்த்து கொலை செய்தார். மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்து, மகளை காப்பாற்ற முயன்ற தாய்க்கும் அரிவாள் வெட்டு விழுந்து, அவரின் கைகளும் துண்டாகின. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின் மகாலட்சுமி வீட்டில் நடந்த கொடூரமும் தெரியவர, உயிருக்கு போராடிய சின்னபிடாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மகாலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தனிப்படை அமைத்த காவல் துறையினர், பிரவீனை (வயது 24) கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையின் பேரில், கொலை வழக்கில் தொடர்புடைய வேல்முருகன் (வயது 22), மூர்த்தி (வயது 23), ராமகிருஷ்ணன் (வயது 19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு நபருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madurai #Thirumangalam #tamilnadu #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story