காதல் திருமணம் செய்து, மாமனாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்; நடந்த பரபரப்பு சம்பவம்.!
காதல் திருமணம் செய்து, மாமனாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்; நடந்த பரபரப்பு சம்பவம்.!
மகளுடன் காதல் திருமணம் செய்ததால் இருவீட்டார் மோதலில் இருந்து வந்த நிலையில், மருமகனால் மாமனார் கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், தச்சம்பத்து பகுதியில் வசித்து வருபவர் பிரபு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக, அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணத்தில் பெண்ணின் தந்தை ரவிக்கு விருப்பம் இல்லாத நிலையில், சம்பந்தி வீடுகள் எப்போதும் தகராறில் ஈடுபட்டுக்கொண்டே இருந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பிரபு, மாமனார் ரவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்து காவல் துறையினர் பிரபு மற்றும் அவரின் தந்தை முத்துபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.