#BigNews: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு., பகீர் வீடியோ வெளியானது.. அதிர்ச்சி சம்பவம்.!
#BigNews: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு., பகீர் வீடியோ வெளியானது.. அதிர்ச்சி சம்பவம்.!
ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரமுகராக இருந்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவில் இவரின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், வீட்டிற்கு வெளியே இருந்தவாறு பெட்ரோல் குண்டு வீசி தப்பி சென்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை சேகரித்தனர். மேலும், நிகழ்விடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, அது குறித்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முன்னதாக கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362