இரயில் பயணிகள் கவனத்திற்கு.. சிறப்பு இரயில் பிப். 24 முதல் முழுவதும் இரத்து.. அறிவிப்பு.!
இரயில் பயணிகள் கவனத்திற்கு.. சிறப்பு இரயில் பிப். 24 முதல் முழுவதும் இரத்து.. அறிவிப்பு.!
இந்தியாவில் உள்ள பல்வேறு இரயில் வழித்தடங்கள் மின்வழித்தடமாக மாற்றும் பணிகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இதற்காக தொகையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொல்லம் - புனலூர் இடையே இரயில் பாதை மின்மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.
அதற்கான முதற்கட்ட பணிகள் அனைத்தும் நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழு வீச்சில் பணியை நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட சரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் கொல்லம் - புனலூர் இடையே இரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், கொல்லம் - புனலூர் இரயில் பாதை பிரிவு மின்மயமாக்கும் பணிகள் நடைபெறுவதால், செங்கோட்டை - கொல்லம், கொல்லம் - செங்கோட்டை (06659 / 06660) ஆகிய விரைவு சிறப்பு இரயில்கள் பிப். 27 ஆம் தேதி முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை முழுவதுமாக இரத்து செய்யப்படுகிறது என மதுரை இரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362