என்னனு சொல்றது!! பிரசவத்திற்காக வந்திருந்த மகள்!! குழந்தையோடு அழைத்து செல்லும் வழியில் நடந்த பதறவைக்கும் கொடூரம்..
காரின் முன்பக்க டயர் வெடித்து மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த
காரின் முன்பக்க டயர் வெடித்து மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் அபுபக்கர். பிரசவத்திற்காக வந்திருந்த தனது மூத்த மகளுக்கு குழந்தை பிறந்தநிலையில், மகள் மற்றும் அவரது குழந்தை மற்றும் சில உறவினர்களை அழைத்துக்கொண்டு அபுபக்கர் தனது மகளை அவரது கணவர் வீட்டில் விடுவதற்காக ஆம்னி வேனில் சிவாகாசிக்கு சென்றுகொண்டிருந்தார்.
அவர்கள் சென்றுகொண்டிருந்த கார் கள்ளிக்குடி அருகே சென்றுகொண்டிருந்த, எதிர் திசையில் விருதுநகரில் இருந்து பெங்களூரு நோக்கி அதிவேகத்தில் வந்துகொண்டிருந்த ஹுண்டாய் கார் ஒன்று முன்பக்க டயர் திடீரென வெடித்ததில், கார் கட்டுப்பாட்டை இழந்து அபுபக்கரின் குடும்பத்தினர் சென்றுகொண்டிருந்த ஆம்னி கார் மீது பயங்கர வேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்துகொண்டிருந்த அபுபக்கர் மற்றும் காரில் இருந்து மூன்று பெண்கள் உட்பட மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்த 7 மாத குழந்தை உட்பட மற்ற இருவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரசவத்திற்காக வந்த மகளை மீண்டும் கணவர் வீட்டிற்கு அழைத்துச்செல்லும் வழியில் நடந்த இந்த கோர விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362