×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர்.. அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்.!

காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர்.. அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்.!

Advertisement

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி கஞ்சமநாதன் பேட்டையில் வசித்து வருபவர் ஜோதி. இவருடைய மகன் அசோக் குமார் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடலூரில் கல்லூரியில் படிக்கும் போது அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த இளம் பெண் கடந்த நவம்பர் 29ஆம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அசோக்குமார் கடந்து சில நாட்களாக மிகுந்த மன விரக்தியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை தனது கை, கால்களை தானே கட்டிக் கொண்டு கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cuddalore #Kullanchavadi #suicide #lovers suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story