×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலி... ஆத்திரத்தில் காதலியை உயிருடன் எரித்த காதலன்... பதற வைக்கும் துயர சம்பவம்!!

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலி... ஆத்திரத்தில் காதலியை உயிருடன் எரித்த காதலன்... பதற வைக்கும் துயர சம்பவம்!!

Advertisement

திருப்பூர் மாவட்டம், பல்லடம்-பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள பனைப்பாளையம் பகுதியில் இன்று மாலை இளம்பெண் ஒருவர் உடலில் தீ காயங்களுடன் உயிருக்கு போராடி கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக வந்த மக்கள் பார்த்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்த பெண் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த பூஜா(19) என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்தப் பெண் லோகேஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும், இருவரும் இன்று தனிமையில் சந்தித்து பேசிய போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனை வற்புறுத்தியதில் காதலன், காதலியை கடுமையாக தாக்கி விட்டு உயிருடன் தீ வைத்து கொளுத்தி சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

அதனையடுத்து போலீசார் லோகேஷை கைது செய்த போது அவரது உடல் நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். உடனே திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூஜாவுக்கு கிட்டத்தட்ட 90 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thirupur #Girl Friend #Frief
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story