×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுவால் சீரழியும் தமிழகம்.! எப்போது இதற்க்கு விடிவு காலம்.? பரிதவிக்கும் அப்பாவி பெண்கள்.!

முந்தய காலத்தில் கள்ளுக்கடைகள் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் இயங்கி வந்தன. அந்த

Advertisement

முந்தய காலத்தில் கள்ளுக்கடைகள் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் இயங்கி வந்தன. அந்த சமயத்தில் குடிப்பது தெரிந்தால் கேவலம் என்ற உணர்வு குடிப்பவர்களுக்கு இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் குடியினால் பல குடும்பங்கள் அழிந்தன. இந்த சமூக சீர்கேட்டை ஒழித்திடவே சமூக நலத்தில் அக்கறையுள்ள தலைவர்கள் மதுவிலக்கை கொண்டு வந்தனர்.  

ஆனால் தற்போது அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தி வருகிறது. இதனால் தற்போது மது குடிப்பது சமூக அந்தஸ்து என்ற நிலை போல் மாறிவிட்டது. பல இளைஞர்கள் மதுவினால் தங்களது வளர்ச்சி பாதையை இழந்து, எதிர்காலத்தை சீரழித்து கொண்டுள்ளனர். மதுவுக்கு எதிராக பலர் குரல் எழுப்பியும் தற்போதுவரை மதுவை ஒழிக்க முடியவில்லை. மதுவினால் பலரது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் சூழல் வந்துவிட்டது.

இந்தநிலையில் சிவகாசியை சேர்ந்த சக்திசரவணக்குமார் என்ற இளைஞருக்கு சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து  தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் குடிபழக்கத்துக்கு அடிமையான சக்திசரவணக்குமார் தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு அவரது மனைவி தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். 

இந்தநிலையில் தனியாக வசித்து வந்த சக்திசரவணக்குமார் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்திசரவணக்குமாரின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலரது வாழ்க்கையை சீரழிக்கும் மதுவினால் அப்பாவி பெண்கள் பரிதவித்து வருகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#alcohol #drunk man
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story