×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓட்டுனர் கவனக்குறைவால் நொடிப்பொழுதில் நேர்ந்த சம்பவம்.. கதறும் பெற்றோர்.!

ஓட்டுனர் கவனக்குறைவால் நொடிப்பொழுதில் நேர்ந்த சம்பவம்.. கதறும் பெற்றோர்.!

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாச்சாங்காடு பாளையத்தில் ஒரு ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சைலா என்ற மனைவியும், சாய்சரண் என்ற மகனும் உள்ளனர். இதில் மகன் சாய்சரண் பத்தாம் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்துள்ளான்.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து சிறுவன் சாய்சரண் வேனில் இருந்து இறங்கி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுவன் சாலையில் நடந்து சென்றதை கவனிக்காத வேன் ஓட்டுநர் வேனை திருப்பியுள்ளார். இதனால் வேனின் பின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் படுகாயமடைந்தான்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கப்பக்கத்தினர் சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Covai #accident #death #school boy #Lkg boy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story