×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமாகாமல் இருந்த வழக்கறிஞர்.. விரக்தியில் விபரீத முடிவு... அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!

திருமணமாகாமல் இருந்த வழக்கறிஞர்.. விரக்தியில் விபரீத முடிவு... அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!

Advertisement

கரூர் மாவட்டம் வடக்கு சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பன் மகன் ராமலிங்கம். ராமலிங்கம் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். ராமலிங்கத்திற்கு 41 வயதாகியும் திருமணமாகவில்லை என்ற மன வருத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் மனவிரக்த்தில் இருந்த ராமலிங்கம் தனது வீட்டில் இருந்த சாணி பவுடரை கலக்கி குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அறிந்த ராமலிங்கத்தின் தந்தை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கருப்பன் அளித்த தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த போலீசார் ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Unmarried lawyer #Stressed #Sucide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story