×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; மனதுடைந்த சிறுமி தற்கொலை முயற்சி : காமுகன் போக்ஸோவில் கைது.!

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; மனதுடைந்த சிறுமி தற்கொலை முயற்சி : காமுகன் போக்ஸோவில் கைது.!

Advertisement

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். 

கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள பாபநாசம், அய்யம்பேட்டை பசுபதி கோவில் கிராமத்தில் அரசு உதவி பெறும் புனித கபிரியேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவிக்கு, அவரின் வீட்டு அருகே வசித்து வரும் கட்டிட தொழிலாளி கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி, சம்பவத்தன்று பள்ளியின் முதல் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். படுகாயம் அடைந்தவர் மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் விசாரணை நடத்தையில், பாலியல் தொல்லை விவகாரம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kumbakonam #tamilnadu #Sexual Harassment #police #Investigation #கும்பகோணம் #பாலியல் தொல்லை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story