×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லாரி ஓட்டுனரின் அலட்சியத்தால் நொடியில் நடந்த விபத்து: 3 இளைஞர்கள் பலியான விவகாரத்தில் கண்ணீர் சோகம்.!

லாரி ஓட்டுனரின் அலட்சியத்தால் நொடியில் நடந்த விபத்து: 3 இளைஞர்கள் பலியான விவகாரத்தில் கண்ணீர் சோகம்.!

Advertisement

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரியில், நேற்று முன்தினம் சாலையோரம் நிறுத்த முயன்ற லாரியின் மீது கார் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, கோனேரிப்பள்ளி பகுதியில் அதிகாலை நடந்த விபத்தில், சரக்கு லாரியின் பின்பக்கம் கார் மோதி இத்துயர விபத்து நடந்துள்ளது.

லாரி ஓட்டுநர் முன்னறிவிப்பின்றி சாலையோரம் வாகனத்தை நிறுத்த முயற்சித்தால், பின்னால் வேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

விபத்து தொடர்பான தகவலை அறிந்ததும் சூளகிரி காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விசாரணையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நரேன் யஷ்வந்த், சேலம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் அன்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

மேட்டூரை சேர்ந்த தர்வின், திருச்சியை சேர்ந்த பர்வீன் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பணியாற்றி வரும் ஐவரும், திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தபோது சூளகிரியில் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Krishnagiri #Sulagiri #accident #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story