×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சத்துணவில் காலை உணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு: உணவில் பல்லி கிடந்ததால் சோகம்.!

சத்துணவில் காலை உணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு: உணவில் பல்லி கிடந்ததால் சோகம்.!

Advertisement

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், சின்னபௌகொண்டப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று காலை மாணவர்களுக்கு வழக்கம் போல சிற்றுண்டி வழங்கப்பட்ட நிலையில், உணவை சாப்பிட்ட ஒன்பது மாணவர்கள், ஒரு மாணவி என பத்து பேர் தலைசுற்றல் வாந்தி எடுத்து இருக்கின்றனர். 

இதனால் பதறிப்போன பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். முதற்கட்ட விசாரணையில் உணவில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு காலையிலும் சிற்றுண்டி வழங்கும் திட்டம், நடப்பு திமுக அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. சத்துணவில் சமைக்கும் ஊழியர்களின் கவனக்குறைவு, 10 மாணவர்களின் உடல்நலனை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Krishnagiri #Lizard #tamilnadu #school #Hosur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story