×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலை தட்டி கேட்டவருக்கு இரும்பு கம்பியால் அடி... தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது.! மகன் தப்பி ஓட்டம்.!

கள்ளக்காதலை தட்டி கேட்டவருக்கு இரும்பு கம்பியால் அடி... தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது.! மகன் தப்பி ஓட்டம்.!

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விவசாயி ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 37 வயது பெண்மணி அவரது மகன் மற்றும் கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள  ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி லட்சுமி(37). பெருமாள் கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே அவரது மனைவி தனது 18 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் லட்சுமிக்கும் தொட்டதிம்மனஹள்ளியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனைத் தொடர்ந்து லட்சுமியை சந்திப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்று இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். இது அப்பகுதியில் வாழ்ந்த மக்களை எரிச்சலடைய  செய்திருக்கிறது. இது தொடர்பாக கடந்த எட்டாம் தேதி மாலை அப்பகுதியைச் சார்ந்த குமார் என்ற விவசாயி லட்சுமி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

அப்போது ஜெயப்பிரகாஷ், லட்சுமி மற்றும் அவரது மகன் ஆகிய மூவரும் சேர்ந்து விவசாயி குமாரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை லட்சுமி அவரது கள்ளக்காதலன் ஜெயப்பிரகாஷ் ஆகியோரை கைது செய்தது  மேலும் தலைமறைவாக உள்ள லட்சுமியின் மகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில்  போஸ் மணிகண்டன் அரசு மற்றும் குமார் ஆகியோரின் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Krishnagiri #Osur #illicitrelation #farmerattacked
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story