×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாயுடன் உறங்கிய இரண்டரை வயது குழந்தை; கண்விழித்த பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

kovai - kariakavundanur child amrutha death

Advertisement

கோவை அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்த தம்பதி கனகராஜ், காஞ்சனா. கோவை விளாங்குறிச்சியில் உள்ள குப்புராஜ் தோட்டத்தில் குடியிருக்கும் இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ருதா என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் ஜேசிபி வாகனம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்கள்.

நேற்று இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் சிலர் வந்திருந்தனர். நேற்று இரவு உணவு சாப்பிட்ட பிறகு குழந்தையுடன் காஞ்சனா மற்றும் கனகராஜிம் வீட்டின் உள்ளே உறங்கியுள்ளனர். உறவினர்கள் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர். அதிகாலை இரண்டரை மணியளவில் எழுந்த காஞ்சனா குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்துள்ளார்.

அதனை தொடர்ந்து இன்று காலை நாலரை மணிக்கு காஞ்சனா எழுந்து பார்த்தபோது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் முன்பு எதாவது விளையாடிக்கொண்டு இருக்கும் என தேடிப்பார்த்தனர். அருகில் எங்காவது இருக்குமா எனவும் உறவினர்கள் மற்றும் கனகராஜூம் தேடிப்பார்த்தனர், ஆனால் கிடைக்கவில்லை.

இந்நிலையில், வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கருவேலங்காட்டுப் பகுதியில் தேடிப்பார்த்தபோது அங்குள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை அம்ருதா கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே கிணற்றில் கயிற்றை கட்டி இறங்கி குழந்தையை தூக்கினர். குழந்தை மயங்கி இருப்பதாக நினைத்து தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பீளமேடு காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரின் அருகில் படுத்திருந்த இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்த நிலையில், கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kovai #Child death #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story