×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நான்கு குழந்தைகள், மனைவியை வெட்டி கொலை செய்து... தானும் தூக்கு போட்டு இறந்த கூலி தொழிலாளி...!!

நான்கு குழந்தைகள், மனைவியை வெட்டி கொலை செய்து... தானும் தூக்கு போட்டு இறந்த கூலி தொழிலாளி...!!

Advertisement

திருவண்ணாமலை அருகே கூலி தொழிலாளி ‌ஒருவர் நான்கு குழந்தைகள் மற்றும் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பழனி (40), இவருைடய மனைவி வள்ளி (37),  மகள்கள் சவுந்தர்யா (20), திரிஷா (15), மோனிஷா (14), பூமிகா (9), தனுசு (4), மகன் சிவசக்தி (6). இதில் மூத்த மகள் சவுந்தர்யாவை சில மாதங்களுக்கு முன் தர்மபுரி அருகே உள்ள மத்தூரில் திருமணம் செய்து கொடுதுள்ளார். திரிஷா பத்தாம் வகுப்பும், மோனிஷா ஒன்பதாம்  வகுப்பும், பூமிகா நான்காம் வகுப்பும், சிவசக்தி 1-ஆம் வகுப்பும் படித்து வந்தனர். 

இந்நிலையில் பழனி, மோட்டூர் பகுதியில் காஞ்சி கொரட்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மதுளமேரி என்பவரின் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த 4 வருடங்களாக பயிர் சாகுபடி செய்து வந்தார். பழனி தனது குடும்பத்துடன் நிலத்தில் இருக்கும் வீட்டில் வசித்து வந்தார்.

பழனி கடந்த சில மாதங்களாக குடி மற்றும் கஞ்சா போன்ற போதை பழக்கங்களுக்கு அடிமையாகி சரிவர சாப்பிடாமலும், வேலைகள் எதுவும் செய்யாமலும் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இருவர் கொண்டோம் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை ஜானகி தனது மகள் வீட்டுக்கு சென்றுள்ளார் அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்ததால் அவர் குரல் கொடுத்துள்ளார்.

அப்போது வீட்டின் உள்ளே இருந்து அழுகை குரல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜானகி உடனடியாக கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு தனது மகள் வள்ளி மற்றும் குழந்தைகள் அனைவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்து கூச்சல் போட்டு அழுதுள்ளார். 

அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது படுக்கை அறையில் வள்ளி, திரிஷா, மோனிஷா, சிவசக்தி, தனுசு ஆகியோரின் தலை மற்றும் கழுத்தில் வெட்டுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பூமிகா தலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக பூமிகாவை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பழனி, தனது மனைவி மற்றும் குழந்தைகளை கஞ்சா போதையில் வெட்டிக்கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இருந்தாலும், அவர் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்துவிட்டு பழனியை தூக்கில் தொங்க விட்டார்களா, என காவல்துறையினர்  விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thiruvannamalai district #Laborer #Murder Wife #Murder Childs #Commit Suicide #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story