பெண்களை கொலை செய்து சடலத்துடன் உல்லாசமாக இருப்பேன்! இளைஞனின் பதறவைத்த வாக்குமூலம்!
Kill the women and happy with the corpse
தமிழகத்தில் கைது செய்யப்பட்ட நபர், பெண்களை கொலை செய்து, சடலத்துடன் உல்லாசமாக இருப்பேன் என்று வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி பகுதியை சேர்ந்தவர் சரோஜம்மாள். 65 வயதான இவரை சில மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் அம்மிகல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் வசித்து வந்த ஆனந்தன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவரிடம் மூக்குத்தி, தாலி போன்ற நகைகள் இருந்ததால், அவரிடம் போலீசார் கிடுக்கிடுப் பிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அவன் கூறுகையில், நான் இதற்கு முன்னே இதேபோல ஒரு கொலை செய்தேன். பிறகு பிணத்துடன் உல்லாசமாக இருந்தேன். இதைத் தொடர்ந்து நகைகளை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டேன். இதேபோலத்தான் சரோஜம்மாவையும் கொலை செய்து உல்லாசமாக இருந்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362