நடிகை குஷ்பு சென்ற கார் மேல்மருவத்தூர் அருகே விபத்து.. குஷ்புவின் நிலை என்ன? வைரலாகும் டிவிட்டர் பதிவு
நடிகை குஷ்பு சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை குஷ்பு சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பாஜக கட்சியில் சேர்ந்த நடிகை குஷ்பு சென்னையில் இருந்து கடாலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்க்காக காரில் சென்றுள்ளார். அவர் சென்ற கார் மேல்மருவத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது டேங்கர் லாரி ஒன்று அவரது கார் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் குஷ்பு லேசான காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்தும், விபத்துக்குள்ளான காரின் புகைப்படங்களிலும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை குஷ்பு. அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், "மேல்மருவத்தூர் அருகே டேங்கர் லொறி நான் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. கடவுளின் ஆசியால் நான் நலமாக இருக்கிறேன். கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்கான எனது பயணம் தொடரும்.
கடவுள் முருகன் எங்களை காப்பாற்றிவிட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். எனது கணவர் கடவுள் முருகன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பார்த்துவிட்டோம்" என பதிவிட்டுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362