தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

17 வயது காதலன் தற்கொலை செய்ததால், 16 வயது காதலியும் விஷம் குடித்து உயிரை மாய்த்த சோகம்.!

17 வயது காதலன் தற்கொலை செய்ததால், 16 வயது காதலியும் விஷம் குடித்து உயிரை மாய்த்த சோகம்.!

Karnataka Mandya Minor Couple Suicide due to Parents Opposite to their Love Advertisement

பதின்ம வயதில் காதல் வலையில் விழுந்த சிறுவன் - சிறுமி, பெற்றோரின் எதிர்ப்பால் தற்கொலை செய்துகொண்டுள்ள சோகம் நடந்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டம், ஆலதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹசாந்த் (வயது 17). இதனைப்போல, அங்குள்ள சொட்டனஹள்ளி கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மலவல்லி நகரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.யூ.சி. முதல் வருடம் பயின்று வந்துள்ளனர். 

இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறவே, 18 வயது கூட நிரம்பாத இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவரவே, படிக்கின்ற வயதில் காதல் தேவையற்றது என்று கூறி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும், படிப்பில் கவனம் செலுத்தக்கூறி அறிவுறுத்தி இருக்கின்றனர். 

karnataka

பருவ வயது காதல் ஹார்மோனால் மதியிழந்து காணப்பட்ட காதல் ஜோடி, மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை விரக்தியின் உச்சத்தில் இருந்த ஹசாந்த் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தகவலை அறிந்த காதலியான சிறுமியும் விஷம் குறித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

அவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மலவல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #Mandya #Minor Couple #suicide #Love #parents #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story