×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாய்ச்சல்ல சிங்கம்..! குணத்துல தங்கம்..! மக்கள் மனதை கவர்ந்த காளை..! வைரல் வீடியோ..!

Karaikuti manjuviratu pull shaved women and children

Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மிகப்பெரிய பொட்டல் பகுதியில் காளையின் கழுத்தில் துண்டை கட்டி, மாடுபிடி வீரர்கள் ஓன்று சேர்ந்து அந்த துண்டை அவிழ்ப்பார்கள். இதுபோன்ற மஞ்சுவிரட்டு போட்டிகளும் தமிழத்தின் பல்வேறு இடங்களில் நடந்துவருகிறது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சிராவயல் என்னும் பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டி போட்டியில், போட்டி முடிந்து ஒரு காளையை ஆட்டோவில் ஏற்றும்போது அந்த காளை கயிறை அறுத்துக்கொண்டு ஆக்ரோஷமாக ஓடுகிறது.

காளை வருவது தெரியாமல் கைக்குழந்தை ஒன்றை தூக்கிக்கொண்டு, ஒரு சிறுவனுடன் தாய் ஒருவர் அந்த காளைக்கு குறுக்கே வருகிறார். காளை வருவதை பார்த்து தனது குழந்தைகளை இறுக்கி அணைத்துக்கொண்டு கீழே அமர்கிறார். அவ்வளவு ஆக்ரோஷத்துடன் ஒட்டிய காளை, அந்த தாயையும், குழந்தையையும் பார்த்ததும், தனது ஆக்ரோஷத்தை அடக்கி, அவர்களை ஏதும் செய்யாமல் அவர்களை தாண்டி செல்கிறது.

அவ்வளவு சீற்றத்திலும், தாயையும் குழந்தையையும் தாண்டிச் செல்லும் காளை என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mysteries #myths #jallikattu #Manjuviratu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story