×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நண்பனுடன் வாக்குவாதம்... நெஞ்சில் குத்தி கிழித்த துரோகம்.. பரிதாபமாக பலியான சோகம்.!

நண்பனுடன் வாக்குவாதம்... நெஞ்சில் குத்தி கிழித்த துரோகம்.. பரிதாபமாக பலியான சோகம்.!

Advertisement

தன்னை காண வந்த நண்பனுடன் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தெங்கம்புதூர் காட்டுவிளை நகரை சார்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 26 ஆம் தேதி சொத்தவிளை பகுதியில் இருக்கும் நண்பர் அருண் (வயது 31) என்பவரின் வீட்டிற்கு சென்றிருந்தார். 

அங்கு நண்பர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது திடீரென இருவருக்குள்ளும் தகராறு ஏற்படவே, அருண் மற்றும் அவரின் நண்பர் ராம்குமார் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். கத்திகுத்து சம்பவமும் நடைபெற்ற நிலையில், மணிகண்டன் படுகாயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். 

அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக சுசீந்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவே, மருத்துவமனையில் இருந்த மணிகண்டனும் பரிதாபமாக உயிரிழந்தார். 

அதனைத்தொடர்ந்து, கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி ராம்குமார் மற்றும் அருண் ஆகியோரை  கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kanyakumari #tamilnadu #Murder #police #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story