×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

10 பைசாவுக்கு சிக்கன் பிரியாணியா.? போலீசாரின் அதிரடி செயல்.!

10 பைசாவுக்கு சிக்கன் பிரியாணியா.? போலீசாரின் அதிரடி செயல்.!

Advertisement

சமீப காலமாகவே தங்களது கடையை டிரண்ட்டாக்க, பலரும் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். ஒரு ரூபாய்க்கு பிரியாணி கொடுப்பது, இலவசமாக புடவை கொடுப்பது, தக்காளி வாங்கினால் புடவை இலவசம், செல்போன் வாங்கினால் தக்காளி இலவசம் என்று பல விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம். 

அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரியாணி கடையில் பழைய 1,2,5 மற்றும் 10 பைசா நாணயங்களுக்கு இலவசமாக பிரியாணி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சற்று நேரத்தில் இந்த தகவல் அப்பகுதியில் தீயாக பரவிய நிலையில் மக்கள் தங்களிடம் வீட்டில் கிடந்த பழைய நாணயங்களை எடுத்துக் கொண்டு அந்த கடையை நோக்கி படையெடுத்து வந்துள்ளனர். 

இதன் காரணமாக குறிப்பிட்ட பிரியாணி கடையில் பயங்கர கூட்டம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட போலீசார் விரைந்து வந்து பிரியாணி கடையை தற்காலிகமாக மூடி உள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பழைய நாணயங்களை சேமிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த அந்த பிரியாணி கடை முதலாளி இப்படி ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chicken biryani #Kanniyakumari #kulachal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story