×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரண்டு இளைஞர்களிடம் காதலிப்பதாக கூறி இளம்பெண் செய்த மோசமான செயல்! வெளியான பரபரப்பு அதிர்ச்சி தகவல்.

Kaniyakumari

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ராசிபன் என்ற இளைஞர் கிப்ட் ஷாப் கடை நடத்தி வந்துள்ளார். அங்கு கடைக்கு வந்த ஆஸ்மியை என்ற பெண்ணுடன் ராசிபனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல அது காதலாக மலர்ந்துள்ளது. 

ராசிபன் அந்த பெண்ணுக்காக நிறைய கிப்ட் மற்றும் தங்க சங்கிலி என வாரி வாரி வழங்கியுள்ளார். இருவரும் இணைந்து வெளியே சென்று ஊர் எல்லாம் சுற்றி ராசிபனின் பணத்தை அதிகம் செலவு செய்துள்ளார் ஆஸ்மி. சில நாட்கள் கழித்து ராசிபனிடம் அந்த பெண் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். 

காதலர் தினத்திற்கு கூட அந்த பெண் பேசாமல் இருந்ததால் கடும் கோபமான ராசிபன் நேராக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது காதலி வேறு ஒரு ஆணுடன் உறையாடி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராசிபன் அந்த இளைஞரிடம் சண்டையிட்டுள்ளார். 

இதனை பார்த்த அந்த பயந்து போய் அருகில் உள்ள போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வந்து விசாரணை செய்த போது ஆஸ்மி, ராசிபன் யார் என்பதே எனக்கு தெரியாது. அவர் ஒரு தலையாக என்னை காதலித்து விட்டு இப்படி நடந்து கொண்டுள்ளார் என கூறியுள்ளார். 

இதனால் மனமுடைந்து ராசிபன் காவல் நிலையத்திற்கு வெளியே சென்று மனமுடைந்து உட்கார்ந்துள்ளார். பலர் வந்து சமாதானம் செய்து அவர் எந்த வித அசைவும் இன்றி இருந்துள்ளார். இந்நிகழ்வு ராசிபன் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kaniyakumari
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story