×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் என கூறி பெண்களின் போட்டோவை மாபிங் செய்து பணம் பறித்த சகோதரர்கள்.. முகநூல் உபயோகிப்பாளர்களே உஷார்.! 

நடிகர் என கூறி பெண்களின் போட்டோவை மாபிங் செய்து பணம் பறித்த சகோதரர்கள்.. முகநூல் உபயோகிப்பாளர்களே உஷார்.! 

Advertisement

பெண்களிடம் நட்பாக பழகி, அவர்களின் போட்டோவை பெற்று மாபிங் செய்து மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திரைப்பட நடிகர் கனா தர்சன் என்ற பெயரில் இயங்கி வந்த முகநூல் பக்கத்தில், தன்னை திரைப்பட நடிகர் எனக்கூறி அறிமுகம் செய்த மர்ம நபர் பெண்களின் புகைப்படத்தை நூதனமாக பேசி பெற்றுள்ளனர். 

பின்னர், இதனை வைத்து மாபிங் செய்து, சம்பந்தப்பட்ட பெண்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பயந்துபோய் பணம் கொடுத்து துயரப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண்மணி ஒருவரிடம் கனா தர்சன் முகநூல் பக்கத்தில் இருந்து நட்பு அழைப்பு கிடைக்க, அவரிடமும் தனது கொடூர வேலையை கும்பல் காண்பித்துள்ளது. அவரிடம் ரூ.2 இலட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்மணி காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி ஈரோடு பி.பி அஹ்ரகாரம் தெருவில் வசித்து வரும் சகோதரர்களை கைது செய்தனர். முகநூல் பழக்கம் | ஆபாச படங்களை வைத்த உரூ.2 இலட்சம் கேட்டு மிரட்டல் 

சகோதரர்களான அலாவுதீன், வாஹித் ஆகியோர் முகநூலில் போலியான கணக்கை தொடங்கி பெண்களை குறிவைத்து போட்டோ வாங்கி மாபிங் செய்து மிரட்டி பணம் பறித்து வந்த செயல் அம்பலமானது. அவர்களின் செல்போனில் பல பெண்களின் தொடர்பு எண்கள் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kanchipuram Women Complaint #Photo morphing #காஞ்சிபுரம் பெண்மணி #சைபர் கிரைம் போலீஸ் #police investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story