×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாணவர்களுக்கு.. இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..! காரணம் இதுதான்..!!

மாணவர்களுக்கு.. இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..! காரணம் இதுதான்..!!

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிமலை பட்டாசு ஆலை நேற்று வெடித்து சிதறி 9-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். மருத்துவமனையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்கள் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த விஷயம் தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் நாகேந்திரன் உட்பட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவிலுக்காக அதிக வெடிமருந்துள்ள பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் கிடைத்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிமலை வனத்தோட்ட பகுதியில் இருக்கும் 2 ஊராட்சி நடுநிலைப்பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு விபத்தில் 9 பேர் உயிரிழந்த காரணத்தால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu news #tamilnadu school #school students #school leave #பள்ளி விடுமுறை #காஞ்சிபுரம் மாவட்டம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story