தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பட்டப்பகலில், நடுரோட்டில் ரௌடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை; துள்ளத்துடிக்க சுற்றிவளைத்து நடந்த பயங்கரம்.!

பட்டப்பகலில், நடுரோட்டில் ரௌடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை; துள்ளத்துடிக்க சுற்றிவளைத்து நடந்த பயங்கரம்.!

  Kanchipuram Pallavarmedu Rowdy Killed by Gang  Advertisement

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லவர்மேடு பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன் (வயது 37). உள்ளூரில் ரௌடியாக வலம்வந்த பிரபாகரன் மீது, காஞ்சிபுரம் மற்றும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 

இதனிடையே, காஞ்சிபுரம் பகுதியில் வசித்து வந்த தேமுதிக பிரமுகர் ஒருவரின் கொலையில், பிரபாகரன் முக்கிய குற்றவாளியாகவும் கருதப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் காஞ்சி, பிள்ளையார்பாளையம் பகுதியில் அவர் நடந்து வந்துகொண்டு இருந்தார். 

அச்சமயம், அங்கு காரில் வந்த 4 பேர் கும்பல், பயங்கர ஆயுதத்துடன் பிரபாகரனை சுற்றிவளைத்து கொலை செய்ய முயற்சித்தது. சுதாரித்த பிரபாகரன் ஓட்டமெடுத்த நிலையில், நால்வர் கும்பல் பிரபாகரனை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. 

kanchipuram

இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சிவகாஞ்சி காவல் துறையினர், பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் காவல் துறையினருக்கும் குவிக்கப்பட்டுள்ளனர். தனிப்படை கொலையாளிகளை தேடி வருகின்றது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kanchipuram #Pallavarmedu #rowdy murder #Latest news #Crime news #காஞ்சிபுரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story