×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிமுக வேட்பாளர் திடீர் தற்கொலை... காஞ்சிபுரத்தில் பேரதிர்ச்சி.. கவலையில் தலைமை.!

அதிமுக வேட்பாளர் திடீர் தற்கொலை... காஞ்சிபுரத்தில் பேரதிர்ச்சி.. கவலையில் தலைமை.!

Advertisement

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப். 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தமிழக தேர்தல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். 

காஞ்சிபுரம் மாநகராட்சி 36 ஆவது வார்டு அதிமுக வேட்பாளராக ஜானகிராமன் என்பவர் வேட்புமனுத்தாக்கல் செய்து களப்பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் ஜானகிராமன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஜானகிராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தகவலை அறிந்த திமுக தலைமையும் கவலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kanchipuram #election #AIADMK #candidate #suicide #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story