×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லஞ்சம் பெறுவதில் அரசு எவ்வழி - அதிகாரிகள் அவ்வழி.! கமல்ஹாசன் பரபரப்பு ட்வீட்.!

லஞ்சம் பெறுவதில் அரசு எவ்வழியோ அதிகாரிகள் அவ்வழி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகம் முழுவதும் பல அரசு அலுவலகங்களில் கடந்த 75 நாட்களில் ரூ.6.96 கோடி கணக்கில் காட்டாத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்சம் வாங்கியது தொடர்பாக தமிழகத்தில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், "லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி" என பதிவிட்டுள்ளார்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #tweet
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story